பதுளை ரொசட் தோட்டத்தில் லண்டன் வோள்தஸரோ ஸ்ரீ கற்பகவிநாயகர் ஆலய நிதி உதவியில் நிர்மாணிக்கப்பட்ட ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தில் ஆடிப்பூரம் சிறப்பாக நடைபெற்றது.
ஆடிப்பூரத்தினை முன்னிட்டு பால்குட பவனி நடைபெற்றதுடன் பால்குட பவனியை தொடர்ந்து சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன.
இந்த ஆடிப்பூர வழிபாடுகளில் அகிலன் பவுண்டேசனின் இலங்கைக்கான பணிப்பாளர் வி.ஆர்.மகேந்திரன் கலந்துகொண்டு வழிபாடுகளை மேற்கொண்டார்.