பெருந் தலைவரின் பெரும் மூச்சு நின்றது
***************************
மலர்வு - 05.02, 1933
உதிர்வு - 30,06.2024
மூத்த தமிழ்த் தேசியவாதி
மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்
மூத்த தமிழ் வழி காட்டுனர்
மூத்த சட்டத்தரணியார்
மூத்த தமிழ்ப் பண்பாளர்
மூச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்து
முடிவுரை எழுதிவிட்டார்
1977 இல் நாடாளுமன்றில்
ஆர்த்தெழுந்த குரல்
2024 இல் ஒலித்து அடங்கியது
தமிழரின் விடுதலைக்காய்
தள்ளாடும் வயதிலும்
ஒலித்த குரல் ஓய்ந்து விட்டது
திருமலையின் பெருமகனார்
தமிழர் தீர்வுக்காய் உழைத்தவர்
இனித் திரும்பவும் வரமாட்டார்
இறுதிக் காலத்திலாவது
இனப் பிரச்சினை தீருமென்றிருந்த தலைவன் ஏக்கத்துடன் விடைபெற்றார்
சுதந்திர இலங்கையை
அந்தர மாக்கிய
அத்தனை தலைவர்களின்
அகராதிகளை அறிந்தவர்
அகன்றுவிட்டார்.
நேர்மையாய் அரசியல் செய்தவர் கொழும்பில் நிரந்தர வீடற்றவர் நியாயத்தை உரைத்தவர்
நீதியைத் கேட்டவர்
நித்தியமாய் உறங்கி விட்டார்.
அறவழிப்போராட்ட காலம்
ஆயுத வழிப் போராட்ட காலம்
இரண்டையும் மதித்தவர்
இன்னுயிர் ஈந்து விட்டார்
எட்டு சனாதிபதிகளின்
ஏமாற்று வித்தைகளின்
கட்டுமானத்தைப் புரிந்தவர்
காலத்தை முடித்து விட்டார்.
கெளரவ அரசியலின் கனவான் காத்திரமான உரிமைச் செயலாளன் வையத்தில் வாழ்வாங்கு வாழ்ந்தவர் வாழ்வியலின் நெடுங்காலம் நடந்தவர் மெய்வாழ்க்கை முடித்து
மேலகம் சென்று விட்டார்.
ஆத்மசாந்தி வேண்டி
ஆண்டவனைப் பிரார்த்திப்போம்
அன்னாரின் பாதையினை
அழியாமல் காத்து நிற்போம்
தமிழ்த்தாயே தரமான மகனைத்
தந்ததற்கு நன்றியம்மா .......
பதவிக்காய் பணத்திற்காய்
பகட்டுக்காய்ப் பலியாகாத
தமிழினப் பண்பாளனை
இழந்து விட்டோம்......
மரணத்தை வெல்ல
மருந்து இல்லை
மனரணமாகிப்
புலம்புகின்றோம் ஐயா
மரணாவது உங்களுக்கு
ஓய்வை அளிக்கட்டும் ஐயா....
ஞா.சிறிநேசன்.