மட்டக்களப்பு செங்கலடி ரமேஸ்புரம் சிறி சித்திர வேலாயுத சுவாமி ஆலயத்திற்கான பிரதான இராஜகோபுர முகப்புக்கான ஆரம்ப பணிகள் இன்றைய தினம் நடைபெற்றது.
மட்டக்களப்பு செங்கலடி ரமேஸ்புரம் சிறி சித்திர வேலாயுத சுவாமி ஆலயத்தின் மகா கும்பாபிஷேக பெருவிழா எதிர்வரும் 2027 ம் ஆண்டு நடைபெற உள்ள நிலையில் அதற்கான ஆலய புனரமைப்பு பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் ஆலயத்திற்கான பிரதான இராஜகோபுர முகப்புக்கான ஆரம்ப நிகழ்வு நிகழ்வு இன்றைய தினம் சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இன்று காலை 9 மணி முதல் 10 மணிவரை உள்ள சுப முகூர்த்த வேலையில் ஆலய குருக்கள் ஜெயக்குமார் அவர்களினால் இராஜகோபுர முகப்புக்கான கிரியைகள் செய்யப்பட்டு கட்டிடப் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இராஜகோபுர முகப்புக்கான முதல் தளத்திற்கான நிதி உதவிகளை பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் திருக்குமரன் கம்சவாணி குடும்பத்தினர் வழங்கி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இராஜகோபுர முகப்புக்கான இரண்டாம் தளத்திற்கான நிதி உதவிகளை செங்கலடி தளவாய் பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் நாகேந்திரன் மோகன் ராஜன் அவர்கள் 15 இலட்சம் ரூபாய் நிதி உதவியினை வழங்குவதற்கு முன் வந்துள்ளார்.
ரமேஸ்புரம் சிறி சித்திர வேலாயுத சுவாமி ஆலய தலைவர் க.மகேந்திரன் தலைமையில் நடைபெற்ற இன் நிகழ்வில் நிகழ்வில் ஆலய நிர்வாக சபையினர், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர். மேற்படி ஆலயத்தின் கருவறையில் உள்ள வேலானது நல்லூர் கந்தசுவாமி கருவறையில் உள்ள வேலின் உருவத்தை கொண்டு பல அடியார்களுக்கு வேண்டும் வரமளித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.