ஜயகமு ஸ்ரீலங்கா "பல்வேறு பிரதிபலிப்புகளுடன் நுவரெலியாவுக்கு வருகை தந்துள்ளது

 





புதிய உலகை வலிமையுடன் எதிர்கொள்ளும் ஆற்றல் மிக்க எதிர்கால சந்ததியை உருவாக்கும் நோக்கில்  'ஜயகமு ஸ்ரீலங்கா' மக்கள் நடமாடும் சேவை நேற்றும்  இன்றும்  நுவரெலியா சினிசிட்டா மைதானத்தில் நடைபெறுகிறது .


தொழில்  மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார  ஏனைய அரசியல் பிரமுகர்கள், தொழில்  திணைக்களம், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், மனிதவள வேலைவாய்ப்பு திணைக்களம் மற்றும் மாவட்ட செயலாளர் ஆகியோர்கள்  கலந்து கொண்டனர்  .



புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு சலுகைகளையும் கௌரவத்தையும்  வழங்கும் "ஹரசர"   முறைசாரா தொழிலாளர்களுக்கு தொழில் கௌரவத்தை  வழங்கும் 'கருசரு',இளைஞர்கள் மற்றும் குறைந்த வருமானம் பெறுவோரின் எதிர்காலத்திற்கான தொழில் பயிற்சி வாய்ப்புகளை வழங்கும் 'ஸ்மார்ட் யூத் கிளப்'.    பொருளாதாரத்தில் நலிவடைந்த குடும்பங்களின் பிள்ளைகளுக்கு சிரம  வசன நிதியத்தின் மூலம்  பாடசாலை உபகரணங்கள் வழங்குதல் போன்ற பல்வேறு நிகழ்வுகள்  நேற்று நடைபெற்றது .



பாடசாலை  மாணவர்களுக்கு பாடசாலை  உபகரணங்களுடன் புத்தக பைகள், தெரிவு செய்யப்பட பாடசாலைகளின் SMART CLASS ROOM களுக்கு  ஸ்மார்ட் போர்டு வழங்குதல், புலம்பேர் தொழிலாளிகளின்  குடும்பங்களுக்கு சதோச வவுச்சர்கள், மூக்கு  கண்ணாடிகள் போன்ற   பல்வேறு சலுகைகள் வழங்குதல், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்துள்ள  புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு  இதன் போது முதல் முறையாக  50,000 ரூபா கொடுக்கப்பட்டது  .



தொழில்  சந்தை ஆலோசனைகள்,  வழிகாட்டுதல்கள் மற்றும் தொழிலாளர் சட்டம், ஆள் கடத்தல்  தொடரபில்    இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் விழிப்புணர்வு நிகழ்வுகள் இன்று வழங்கப்பட உள்ளன  


“சுற்றுலா விசாவில் தொழிலுக்காக வெளிநாடு செல்ல வேண்டாம் என்று கூறுகின்றோம் இருப்பினும் வெளிநாட்டில் தொழில் இருக்கிறதா ? வெளிநாடு சென்ற பிறகு அங்கு எவ்வகையான வேலைகள் வழங்கப்படுகிறது  என்பதை கண்காணித்த பிறகு தான் சுற்றுலா விசாவில் வெளிநாட்டு செல்வதற்கு  இப்பணியகத்தின் கடுமையான விதிமுறைகளுக்கு உட்பட்டு  பதிவு செய்துகொள்வதற்காக அனுமதி வழங்கப்படுகின்றனது 


'ஜயகமு ஸ்ரீலங்கா' போன்ற வேலைத்திட்டத்தில் இணைந்து வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் மூலம் பதிவு செய்வதில் எவ்விதப் பாதகங்களுமில்லை மாறாக  நன்மைகள்  உண்டு  . 



இதுபோன்றே  தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு  புலமைப்பரிசில்கள்,பாடசாலை உபகரணங்கள் மற்றும் வெளிநாட்டில் தொழில் புரிந்துவிட்டு நாடு திரும்பியதால் பின்னர் சுயதொழில் செய்ய விரும்பினால் அவர்களுக்கு உதவித் தொகை  வழங்கப்படுகிறது.


வெளிநாடு  செல்பவர்களுக்கு பொருளாதாரச் சிரமம் இருப்பின்  அதற்கான நிதி வசதிகள் செய்து கொடுக்கப்படுகிறது . வீட்டுக்கடன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. வெளிநாட்டிற்கு சென்று இலங்கைக்கு பணம் அனுப்பியிருந்தால் மின்சார காருக்கான உரிமம் வழங்கப்படும், மேலும்  டூட்டி பீரில் இலவச பொருட்கள்   வாங்க வாய்ப்பு வழங்கப்படுகிறது .

 வெளிநாட்டில் தொழிலில் இருக்கும் போது ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டால் இலங்கை தூதரகங்கள் மூலம் அவர்களுக்கு தேவையான  நடவடிக்கை எடுப்போம்" என்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விளம்பர பிரிவின் மேலதிக  முகாமையாளர்   பிரியந்த வீரசேகர தெரிவித்தார்