மட்டக்களப்பு மாவட்டத்திற்கு ஜனாதிபதி ரணில் விக்ரசிங்க வருகைதந்தபோது மயிலத்தமடு மாதவனை பிரச்சினைக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கு செய்தி சேகரிக்க சென்ற இரண்டு ஊடகவியலாளர்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு தீர்ப்புக்காக ஒத்திவைப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு ஒக்டோபர் 8ம் திகதி மட்டக்களப்பு - செங்கலடி பகுதிக்கு ஜனாதிபதியின் வருகையின் போது கொம்மாதுறை பகுதியில் - மயிலத்தமடு மாதவனை மேச்சல்தரை பிரச்சினைக்கு தீர்வு கோரி வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், பண்ணையாளர்கள் , சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க உறுப்பினர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட 37 பேருக்கு எதிரான வழக்கு இன்று ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் எடுத்துக்கௌ;ளப்பட்டது. ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற பதில் நீதவான் வி.தியாகேஸ்வரன் முன்னிலையில் இடம்பெற்ற வழக்கு மேலும் 2 நாட்கள் கட்டளைக்காக ஒத்தி வைக்கப்பட்டுள்ளதுடன்,குறித்த வழகானது தீர்ப்புக்காக எதிர்வரும் 20ம் திகதி எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக இங்கு தெரிவிக்கப்பட்டது.