இலங்கை தமிழரசு கட்சி மாநாட்டுக்கு இடைக்கால தடை


இலங்கை தமிழரசு கட்சியின் மகாநாட்டிற்கு திருகோண மாலை நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவினை பிறப்பித்திருக்கின்றது.

இதன்படி எதிர்வரும் 27ஆம் திகதி வரை தேசிய மாநாட்டை நடத்த இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
 
இலங்கை தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட உறுப்பினர் ஒருவர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மனுதாரர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ஜெப்ரி அழகரட்ணம் முன்னிலையாகியிருந்தார்.
 
இதேவேளை, தேசிய மாநாட்டுக்கு தடைகோரி யாழ்ப்பாண நீதிமன்றத்திலும் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு மீதான விசாரணை தற்போது நடந்து வருகிறது