அகிலன் பவுண்டேசனின் அனுசரணையில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் தினம்

(ரஞ்சன்)
மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேசசெயலகமும் கதிரவன் மாற்றுத் திறனாளிகள்  அமைப்பும் இனைந்து நடாத்தும் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் இன்று(31-12-2023)ஆம் திகதி போரதீவுப்பற்று பிரதேச கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.

அகிலன் பவுண்டேசனின் அனுரணையுடன் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதிகளாக போரதீவுப்பற்று பிரதேசசெயலாளர் சோ.ரங்கநாதன் போரதீவுப்பற்று பிரதேசசபை செயலாளர் வி.கௌரிபாலன் ஆகியோர் கலந்துகொண்டதுடன் சிறுப்பு அதிதிகளாக போரதீவுபற்று பிரதேசசெயலக உதவிச்செயலாளர் துலாஞ்சனன், இலங்கைக்கான அகிலன் பவுண்டேசன் பணிப்பாளரும் போரதீவுப்பற்று பிரதேச மரணவிசாரனை அதிகாரியுமான வீ.ஆர்.மகேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது மாற்றுத் திறனாளிகளால் கவிதை ,நாடகம், பாடல் போன்ற நிகழ்ச்சிகள் நடாத்தப்பட்டது.

இன்றைய நிகழ்வில் மாற்றுத்திறனாளிகளை கௌரவித்து அவர்களின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்களும் நிகழ்வில் பங்குபற்றிய அனைவருக்கும் மரக்கன்றுகள் குடைகள் என்பன வழங்கிவைக்கப்பட்டன.

இன்றைய நிகழ்வுக்கு முழு அனுசரணை வழங்கிய அகிலன் பவுண்டேசன்  மற்றும் கிராம உத்தியோகஸ்தர் ஆகியோருக்கு பிரதேசசெயலகத்தினால் நினைவுப் பரிசில்கள் வழங்கி வைத்தனர்.