கிளிநொச்சியில் ஒரு கோடி 32 லட்சம் பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு!


விசேட போதை பொருள் ஒழிப்பு திட்டத்தை  இன்று அமல் படுத்தும் வகையில் இத்திட்டம் தொடர்பாக நேற்று 16.12.2023 மாலை பொலிஸ் மா அதிபர் அவர்கள் அனைத்து மாவட்டங்களில் உள்ள மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அவர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டது. இவ் பணிப்பின் கீழ் விசேட போதை பொருள் ஒழிப்பு குழு ஒன்றை அமைத்து இவ் குழுவின் ஊடாக 17.12.2023 அதாவது இன்று காலை  கிளிநொச்சி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து பாரதிபுரம் பகுதியில் பொலிஸார் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸ் மோப்பநாய் சகிதம் தேடுதலை மேற்கொண்ட போது சுமார் 68 கிலோக்கு மேற்பட்ட 30 கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியில் வீடு ஒன்றின் கூரை தகடுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயம்.