பெரியகல்லாறு ஸ்ரீ வடபத்திரகாளியம்மன் ஆலயத்தில் ஆடிப்பூரத்தினை முன்னிட்டு பால்குட பவனி

இந்துக்களின் மிக முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வான ஆடிப்பூரத்தினை முன்னிட்டு இன்று அம்மன் ஆலயங்களில் விசேட நிகழ்வுகள் நடைபெற்றன.

கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு பெரியகல்லாறு அருள்மிகு ஸ்ரீ வடபத்திரகாளியம்மன் ஆலயத்தில் ஆடிப்பூரத்தினை முன்னிட்டு பால்குட பவனியும் விசேட பூஜைகளும் நடைபெற்றன.

இன்று காலை பெரியகல்லாறு ஸ்ரீசர்வார்த்த சித்திவிநாயகர் ஆலயத்திலிருந்து பால்குட பவனி நடைபெற்றது.

நூற்றுக்கணக்கான அடியார்கள் தலைகளில் பால்குடத்தினையேந்தி ஊர்வலமாக பெரியகல்லாறு அருள்மிகு ஸ்ரீ வடபத்திரகாளியம்மன் ஆலயம் வரையில் வந்தனர்.

அதனை தொடர்ந்து ஆலயத்தில் விசேட யாகபூஜை நடைபெற்றதுடன் அடியார்கள் தங்கள் கைகளினாலேயே அம்பாளுக்கு அபிசேகம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது.

யாகபூஜையினை தொடர்ந்து மூலமூர்த்தியாகிய வடபத்திரகாளியம்மனுக்கும் விசேட அபிசேகம் செய்யப்பட்டதுடன் விசேட பூஜைகளும் நடைபெற்றன.

இதன்போது ஆடிப்பூரத்தின் சிறப்பினைக்கொண்ட கூழ் வைக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டமையும் சிறப்பம்சமாகும்.