சர்வதேச யோகா தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் யோகாசன நிகழ்வு மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் கு.சுகுணன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
சிறப்பு அதிதிகளாக கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் கனகசிங்கம்,கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் டாக்டர் அருளானந்தம்,கிழக்கு பல்கலைக்கழக மருத்துவபீட தலைவர் கலாநிதி சதானந்தன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது சித்த ஆயுர்வேத திணைக்கள வைத்தியர்களினால் யோகாசனம் தொடர்பான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதுடன் யோகாசனப்பயிற்சியும் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வின்போது யோகாசனத்தின் அவசியம் குறித்து பல்வேறு கருத்துரைகள் வழங்கப்பட்டதுடன் உடல் உள புத்துணர்ச்சிக்கு தேவையான யோகாசன பயிற்சியும் வழங்கப்பட்டது.







