ஜனக ரத்நாயக்கவை நீக்குவது தொடர்பான பிரேரணை பாராளுமன்றத்தில் வெற்றி!!


பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியில் இருந்து ஜனக ரத்நாயக்கவை நீக்குவது தொடர்பான பிரேரணை இன்று (24) காலை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

பாராளுமன்ற சபாநாயகர் அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் இதனை சமர்பித்தார்.
கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் விவாதத்திற்குப் பிறகு, அதற்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

தீர்மானத்திற்கு ஆதரவாக 123 வாக்குகளும் எதிராக 77 வாக்குகளும் பதிவாகின.