மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச போரதீவுப்பற்று இளைஞர் சம்மேளனத்தின் ஏற்பாட்டிலும் சுவிஸ் உதயம் அமைப்பின் அனுசரணையுடனும் இந்த நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வின் ஆரம்ப நிகழ்வில் போரதீவுப்பற்று பிரதேசசெயலாளர் ஆர்.ராகுலநாயகி பிரதம அதிதியாக கலந்து கொண்டு ஆரம்பித்துவைத்தார்.
இந்த நிகழ்வில் சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்கு மாகாண கிளையின் தலைவர் மு.விமலநாதன் செயலாளர் திருமதி ரொமிலா செங்கமலன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
போரதீவுப்பற்று இளைஞர் கழக சம்மேளன இளைஞர் யுவதிகள், போரதீவுப்பற்று பிரதேசசபை உத்தியோகஸ்தர் ஊழியர்கள்,பிரதேசசெயலக உதவிப் பிரதேசசெயலாளர்,உத்தியோகஸ்தர்கள்,களுவாஞ்சிகுடி விசேட அதிரடிப்படை அதிகாரிகள், வெல்லாவெளி பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் ஏனைய திணைக்கள உத்தியோகஸ்தர்கள் கலந்து கொன்டு இரத்தம் வழங்கியமை குறிப்பிடத்தக்கதாகும்.










