எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிப்பு!!


தேசிய எரிபொருள் அனுமதிச் சீட்டு QR அமைப்பில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள எரிபொருள் ஒதுக்கீடு அடுத்த மாத எரிபொருள் விலை திருத்தத்திலிருந்து அதிகரிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

CPC நிதி, வர்த்தக மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவுகளுடன் நேற்று பிற்பகல் நடைபெற்ற கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த சந்திப்பின் போது CPC சரக்கு திட்டம், நிதி மற்றும் விநியோக திட்டங்கள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.