மண்முனை தென்மேற்கு பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் ஏகமனதாக நிறைவேற்றம்!

 

மட்டக்களப்பு, மண்முனை தென்மேற்கு பிரதேச சபையின் 2023ம் ஆண்டிற்கான வரவு, செலவுத் திட்டம்  திங்கள்கிழமை (05/12/2022) இன்று  சமர்ப்பிக்கப்பட்டு சபை அமர்வில் கலந்துகொண்ட பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன்  நிறைவேற்றப்பட்டது.

மண்முனை தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் சி.புஸ்பலிங்கம் தலைமையில் நடைபெற்ற அமர்வில், 2023ம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம் தவிசாளரினால் முன்வைக்கப்பட்டது. 

 தவிசாளர் உட்பட 16உறுப்பினர்களைக் கொண்ட மண்முனை தென்மேற்கு பிரதேச சபையில், சபை அமர்வின்போது 16உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது வரவு செலவு திட்டத்திற்கு  16உறுப்பினர்கள் ஆதரவுடன் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.