கல்விச் சீர்திருத்தத்தின் ஒரு பகுதியாக, க.பொ.த சாதாரண தரப் பாடத்திட்டத்தில் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தை (ICT) ஒரு முக்கிய பாடமாக உள்ளடக்குவதற்கு அரசாங்கம் தயாராகி வருகிறது.
கல்விச் சீர்திருத்தச் செயற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், உலகளாவிய தொழில் சந்தையை எதிர்கொள்ளும் வகையில் இலங்கை மாணவர்களை ஆயத்தப்படுத்துவதற்கும் அவர்களை வலுப்படுத்துவதற்கும் ஆர்வமாக உள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சின் வளாகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இச்செயற்பாட்டின் ஒரு பகுதியாக, க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான ஒரு முக்கிய தொகுதியாக ICT அமைவதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் கல்வியறிவு வீதம் அபிவிருத்தியடைந்த நாடுகளுக்கு இணையாக இருப்பதாகவும்,, நவீன கால சவால்களை எதிர்கொள்ள மாணவர்களுக்கு நடைமுறை அறிவை வழங்குவதன் முக்கியத்துவத்தை அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
ICT தொகுதியானது நானோ தொழில்நுட்பம், உயிரி தொழில்நுட்பம், ‘ரோபாட்டிக்ஸ்’ மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற பாடங்களை உள்ளடக்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
2024 ஆம் ஆண்டு முதல் கல்வித்துறையில் சீர்திருத்தம் மற்றும் சீர்திருத்தத்தை கொண்டு வர கல்வி அமைச்சர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
சர்வதேச தொழில் சந்தையில் போட்டியிடுவதற்கு உள்ளூர் மாணவர்களை தயார்படுத்துவதற்கு தற்போதைய கல்வி முறை, பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உள்ள தொகுதிகள் போதுமானதாக இல்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.