பேரூந்து லொறியுடன் மோதி விபத்து!!


தெற்கு அதிவேக வீதியில் மாத்தறை நோக்கி பயணித்த பஸ் ஒன்று லொறியுடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

சுற்றுலாவுக்குச் சென்றவர்களை ஏற்றிச் சென்ற பேரூந்து ரயர் மாற்றிக் கொண்டிருந்த லொறியுடன் மோதியதிலேயே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் காயமடைந்த 11 பேர் பல மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குருந்துகஹஹெத்கெம மற்றும் பத்தேகம இடையே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

எவ்வாறாயினும், விபத்து காரணமாக தடைப்பட்டிருந்த தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் போக்குவரத்து தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.