மின்வெட்டுத் தொடர்பில் முக்கிய அறிவிப்பு!!


இன்றும் (11) எதிர்வரும் 14 ஆம் திகதியும் மின்துண்டிக்கப்பட மாட்டாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 12 ஆம் மற்றும் 13 ஆம் திகதிகளில் ஒரு மணிநேரம் மின்துண்டிப்பு அமுல்படுத்தப்படவுள்ளது.

இதன்படி A முதல் L மற்றும் P முதல் W வலயங்களில் மாலை 6 மணி முதல் இரவு 9 மணிவரையான காலப்பகுதியினுள் சுழற்சிமுறையில் ஒருமணிநேர மின் துண்டிப்பு அமுல்படுத்தப்படவுள்ளது.