மாத ஊதியத்தினை 5000 ரூபாவல் அதிகரிக்க முன்மொழிவு!!


குறைந்தபட்ச மாத ஊதியம் மற்றும் தேசிய குறைந்தபட்ச தினசரி ஊதியத்தை உயர்த்த அமைச்சரவைக்கு முன்மொழியப்பட்டுள்ளது.

தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்படி, தற்போதைய தேசிய குறைந்தபட்ச மாத ஊதியம் 12500 ரூபாவில் இருந்து 17500 ரூபாவாக 5000 ரூபாவினாலும் தேசிய குறைந்தபட்ச தினக்கூலியாக 500 ரூபாவில் இருந்து 700 ரூபாவாக 200 ரூபாவினாலும் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதிய சட்டத்திலும் திருத்தம் செய்யப்பட உள்ளது.

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் கீழ் பணவீக்கம் ஜூன் மாதத்தில் 59% ஆக அதிகரித்துள்ளதால், குறைந்த ஊதியத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் கடும் நெருக்கடியில் உள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.