100 நாட்கள் செயல்முனைவின் 16 ம் நாள் போராட்டம் வவுணியா மாவட்டத்தில் இன்று இடம்பெற்றது.
“வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும்” எனும் 100 நாட்கள் செயல்முனைவின் 16 ம் நாள் போராட்டம் இன்று (16.08.2022) செவ்வாய்க் கிழமை வவுணியா மாவட்டத்தின் செட்டிக்குளம் நகரத்தில் இடம்பெற்றது.
இப் போராட்டத்தில் செட்டிக்குளம் பிரதேசத்தினைச் சேர்ந்த மக்கள், சிவில் அமைப்பினர், பெண்கள் அமைப்பினர், கிராமிய பெண்கள் குழுக்கள், இளைஞர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர் என 150 இற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தங்களுக்கான சம உரிமைகள் கிடைக்கப் பெறவேண்டும், தங்களுக்கான கௌரவமான அரசியல் தீர்வு வேண்டும் எனக் கோரி நின்ஙனர்.
17ம் நாள் போராட்டமானது மன்னார் மாவட்டத்தில் நாளை (17.08.2022) புதன் கிழமை காலை 10 மணிக்கு இடம்பெறவுள்ளது என்பதனை தெரியத்தருவதுடன், இப்போராட்த்தினை வலுசேர்க்க இணையுமாறு வேண்டுகின்றேன்.
நன்றி
சேவையிலுள்ள
திரு.க.லவகுசராசா,
ஒருங்கிணைப்பாளர்,
வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு,
16ஆவணி 2022.
