ரணிலின் பாராளுமன்ற உறுப்புரிமை தொடர்பான மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்!!


பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாராளுமன்ற உறுப்புரிமையை கேள்விக்குறியாக்கி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின், பாராளுமன்ற உறுப்புரிமையை வலுவிழக்கச் செய்து உத்தரவொன்றினை பிறப்பிக்குமாறு கோரி சட்டத்தரணி நாகாநந்த கொடித்துவக்கு தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணைக்கு ஏற்பதா இல்லையா என உயர் நீதிமன்றம் இன்று (19) அறிக்கவிக்க இருந்தது.

இந்நிலையில், பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாராளுமன்ற உறுப்புரிமையை கேள்விக்குறியாக்கி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.