திருப்பெருந்துறை அருள்மிகு ஸ்ரீபஞ்சமுக ஆஞ்சநேயர் ஆலயத்தின் மஹா சங்காபிசேகம்,சனீஸ்வர ஆலய அடிக்கல் நடும் நிகழ்வு


மட்டக்களப்பின் பிரசித்திபெற்ற திருப்பெருந்துறை அருள்மிகு ஸ்ரீபஞ்சமுக ஆஞ்சநேயர் ஆலயத்தின் மஹா சங்காபிசேகம் மற்றும் சனீஸ்வரர் ஆலயத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு நாளை நடைபெறவுள்ளது.

ஆலய தர்மகர்த்தா கி.மகேஸ்வரன் அவர்களின் வழிகாட்டலின் கீழ்; இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.

நாளை காலை 09மணிக்கு கிரியைகள் ஆரம்பமாகி 1008 சங்குகள் கொண்டு மஹா சங்காபிசேகம் நடாத்தப்படும்.

இதன்போது சனீஸ்வரர் பெருமானுக்கு தனி ஆலயம் அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வும் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வினை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படவுள்ளது.அனைத்து பக்தர்களையும் கலந்துகொண்டு ஸ்ரீபஞ்சமுக ஆஞ்சநேயரின் அருளைப்பெற்றுக்கொள்ளுமாறு ஆலய தர்மகர்த்தா கி மகேஸ்வரன் அவர்களும் ஆலய நிர்வாகத்தினரும் அன்போடு அழைப்பு விடுத்துள்ளனர்.