ஆயிஷாவின் படுகொலை சம்பவம்- நீதிமன்றத்தின் உத்தரவு!!


பண்டாரகம - அட்டுலுகம பகுதியில் சிறுமி பாத்திமா ஆயிஷாவின் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த சந்தேகநபரை இன்று பாணந்துறை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே அவருக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபரை நேற்றைய தினம் பாணந்துறை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது, இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்த நிலையிலேயே தற்போது விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டள்ளமை குறிப்பிடத்தக்கது.