திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேசத்தின் தோப்பூர் சின்னப் பள்ளிவாயலுக்கு அருகில் உள்ள வீதியில் வைத்து ஆட்டோ காரில் வந்த சிலர் சிறுமி ஒருவரை கடத்த முற்பட்டபோது அம் முயற்சி தோல்வியில் முடிவடைந்துள்ளது.
இச்சம்பவம் இன்று (30) மாலை இடம்பெற்றுள்ளது.
இரண்டு சிறுமிகள் வீதியால் வந்து கொண்டிருந்தபோது ஆட்டோ காரில் வந்தவர்கள் சிறுமியொருவரின் கையைப்பிடித்து இழுத்து காரில் ஏற்றுவதற்கு முற்பட்டபோது மற்றைய சிறுமி தனது நண்பியை பிடித்து இழுத்து காப்பாற்றியுள்ளார்.
காப்பாற்றப்பட்ட சிறுமியின் கையில் நகக் கீரல் ஒன்றும் காணப்படுகின்றது. குறித்த சம்பவத்தின் போது சிறுமியை காப்பாற்றிய மற்றய சிறுமிக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
வீட்டில் இருக்கும் உங்கள் பிள்ளைகளை வெளியில் அனுப்பும்போது கவனமாக இருந்து கொள்ளுங்கள்.
