திருகோணமலை, திருஞானசம்பந்தர் வீதி, சிவன்கோவிலடியில் மோட்டார்சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
விபத்தில் மோட்டார்சைக்கிளில் வந்த இருவரும் முச்சக்கரவண்டியில் வந்த ஒருவரும் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை திருகோணமலை போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.