நிதியமைச்சர் பதவியில் இருந்து தாம் விலகுவதாக அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
அண்மையில் அமைச்சரவை அமைச்சர்கள் பதவி விலகியிருந்தனர்.
இதனையடுத்து, முன்னதாக நீதியமைச்சராக பதவி வகித்துவந்த அலி சப்ரி நேற்று நிதியமைச்சராக பதவியேற்றார்.
இந்நிலையில், பதவியேற்று 24 மணித்தியாலங்களுக்குள் அவர் பதவி விலகியுள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பிவைத்துள்ள தனது பதவி விலகல் கடிதத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் தான் விலக தயாராகவுள்ளதாகவும் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.