மட்;டக்களப்பு மாவட்டத்தின் அனைத்து சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலும் இன்றைய தினம் விசேட தடுப்பூசி ஏற்றும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதிகளின் நன்மை கருதி இன்று தடுப்பூசி ஏற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இன்றைய தினம் பெருமளவான பொதுமக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசிகளைப்பெற்றுக்கொள்வதற்கு தடுப்பூசி நிலையங்களுக்கு வருகைதந்ததை காணமுடிந்தது.
மாமாங்கம் பொதுச்சுகாதார பரிசோதகர் அலுவலகம் மற்றும் செல்வநாயகம் மண்டபம் ஆகியவற்றில் இன்றைய தினம் தடுப்பூசிகள் ஏற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
மூன்றாவது,இரண்டாவது,முதலாவது தடுப்பூசிகளைப்பெற்றுக்கொள்ளாதவர்கள் அனைவருக்குமாக இன்றைய தினம் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டன.
மாமாங்கம் பொதுச்சுகாதார பரிசோதகர் கிஷான் தலைமையில் தடுப்பூசியேற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.இன்றைய தினம் பெருமளவானோர் தடுப்பூசிகளைப்பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மூன்றாவது தடுப்பூசிபெற்றுக்கொள்வது இலங்கையில் கட்டாயப்படுத்தப்பட்டுள்ள நிலையில் வீதிகளில் படையினர் சோதனைகளை நடாத்தி மூன்றாவது தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு தடுப்பூசிகளை ஏற்றும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ள நிலையில் பொதுமக்கள் தடுப்பூசிகளைப்பெற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டிவருகின்றனர்.