மின்வெட்டு அட்டவணையில் திடீர் மாற்றம்- வெளியாகிய புதிய அறிவிப்பு...!!


கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்காக, நாடளாவிய ரீதியில் இன்று (21) மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு வழங்கப்பட்ட நேர அட்டவணையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு, இலங்கை மின்சார சபைக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

அதற்கமைய, இன்று (21) மாலை 4.30 மணி தொடக்கம் இரவு 10.30 மணி வரையான காலப்பகுதிக்குள் 02 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.