மட்டக்களப்பில் ஏற்றுமதி கைத்தொழில் அபிவிருதி தொடர்பான மீளாய்வு கூட்டம்...!!


ஏற்றுமதி கைத்தொழில் அபிவிருத்தி சபை மற்றும் தேசிய தொழில்முயற்சி அதிகாரசபை இரு சபைகளின் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் 2022 செயற்த்திட்டம் மற்றும் கடந்த வருடத்திற்க்கான மீளாய்வு கூட்டம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று (27) நடைபெற்றது.

மாவட்டத்தின் ஏற்றுமதி கைத்தொழினிலை அதிகரிப்பதையும் அவற்றுக்கான சிறந்த சந்தை வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுப்பதையும் ஏற்றுமதி உற்பதியாளர்களின் தரவுகளை சேகரிப்பது தொடர்பாக கவனம்செலுத்தப்பட்டது.

இதன் போது உத்தியோகத்தர்களின் நடைமுறை பிரச்சினைகள் மற்றும் கிழக்கு மாகாணத்திற்கு ஏற்றுமதி கைத்தொழில் அபிவிருத்தி சபையின் உதவி பணிப்பாளர் ஒருவரி நியமித்து தருமாறு உத்தியோகத்தர்களினால் கோரிக்கை வைக்கப்பட்டது

இவ் நிகழ்வு உதவி மாவட்ட செயலாளர் ஏ.நவேஸ்வரன் தலைமையில், தேசிய தொழில்முயற்சி அதிகாரசபையின் மாவட்ட இணைப்பாளர் கீதா சுதாகரன் ஒழுங்கமைப்பில் கீழ் நடைபெற்றது. நிகழ்வில் ஏற்றுமதி கைத்தொழில் மாவட்ட உத்தியோகத்தர்களின் பங்குபற்றுதலுடன் 14 பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.