மட்டக்களப்பு- நொச்சிமுனையில் கோர விபத்து- ஒருவர் பலி...!!


மட்டக்களப்பு- கல்லடி, நொச்சிமுனை பிரதான வீதியில் இன்றுஇடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நொச்சிமுனை விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிலையம் முன்பாக ஸ்கூட்டி ரக மோட்டார் சைக்கிளும் உழவு இயந்திரமும் மோதியே குறித்த கோர விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விபத்தானது மட்டக்களப்பினை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் உழவு இயந்திரத்துடன் மோதியதில் குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் தொடர்பில் காத்தான்குடி போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.