2022 ஆம் ஆண்டுக்கான தரம் 1 மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் ஏப்ரல் மாதம் முதல் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
கண்டியில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனை கூறினார்.
பாடசாலைக்கு விண்ணப்பிக்கும் நடவடிக்கைகள் வழமை போன்று இடம்பெற்று வருகின்றது. எதிர்வரும் டிசம்பர் மாதம் 23 ஆம் திகதி பாடசாலை தவணை முடிவடைந்து எதிர்வரும் ஜனவரி மாதம் 3 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும்.
மூன்றாம் தவணை பாடத்திட்டத்தை ஏப்ரலில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதுடன், வழமையான சுற்றறிக்கைகளுக்கு அமைய பெற்றோர்கள் தரம் 1 க்கு மாணவர்களை இணைத்துக்கொள்ள விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும்.
அதேநேரம் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஜனவரி மூன்றாம் வாரத்தில் நடத்தப்படும், க.பொ.த உயர்தரப் பரீட்சை பெப்ரவரி முதலாம் திகதி ஆரம்பமாகும்.
க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை மே மாதம் நடத்தி ஜூன் நடுப்பகுதிக்குள் முடிக்க பரீட்சைகள் திணைக்களம் தயாராகி வருவதாகவும் அமைச்சர் இதன்போது கூறினார்.