O/L மற்றும் A/L மாணவர்களுக்கான பிரத்தியேக வகுப்புக்கள் ஆரம்பிக்கும் திகதி வெளியாகியது...!!


நாடளாவிய ரீதியில் கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக  தடைப்பட்டிருந்த கல்விப்பொதுதராதர சாதாரணதரம் மற்றும் உயர்தர மாணவர்களுக்கான பிரத்தியேக வகுப்புக்களை ஆரம்பிப்பதற்கு புதிய சுகாதார வழிகாட்டியில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி முதல் 50 சதவீத மாணவர் கொள்ளளவுடன் பிரத்தியேக வகுப்புக்களை ஆரம்பிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேலகுணவர்தன தெரிவித்துள்ளார்.