மட்டக்களப்பு மாவட்டத்தில் பைசர் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுப்பு


மட்டக்களப்பு மாவட்டத்தில் பாடசாலை மாணவர்களுக்கான பைசர் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் இரண்டாம் நாளாகவும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் 14வைத்திய அதிகாரிகள் பிரிவுகள் ஊடாகவும் பாடசாலை மாணவர்களுக்கான தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் நேற்று முதல் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்ட பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கான தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் இன்றும் இரண்டாவது நாளாகவும்முன்னெடுக்கப்பட்டது.

இன்றைய தினம் நான்கு பாடசாலை மாணவர்களுக்கு இரண்டு நிலையங்கள் ஊடாக தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மற்றும் கறுவப்பங்கேணி விபுலானந்தா கல்லூரி மாணவர்களுக்கு மட்டக்களப்பு இந்துக்கல்லூரியிலும் வின்சன் பெண்கள் உயர் தேசிய பாடசாலை மற்றும் ஆனைப்பந்தி மகளிர் கல்லூரி ஆகிய பாடசாலை மாணவர்களுக்கு வின்சன் பெண்கள் உயர் தேசிய பாடசாலையிலும் தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இன்றைய தினம் 560க்கும் மேற்பட்ட உயர்தரப்பரிவு மாணவர்கள் தங்களது தடுப்பூசிகளைப்பெற்றுக்கொண்டுள்ளதாக பொதுச்சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்.

மட்டக்களப்பில் தடுப்பூசிகளைப்பெற்றுக்கொள்வதில் மாணவர்களும் பெற்றோரும் ஆர்வம் காட்டுவருவதை காணமுடிகின்றது.