நாளை அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு...!!


நாட்டில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் நாளை(03) சர்வதேச மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மூடப்படவுள்ளதாக மதுவரித்திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நாளைய தினம் சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபடுபவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.