மட்டக்களப்பு நகரில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணியும் பொது அமைப்புகளும் இணைந்து இந்த போராட்டத்தினை முன்னெடுத்தது.
ரிசாத் பதியூதின் பாராளுமன்ற உறுப்பினராகவும் முன்னாள் அமைச்சராகவும் இருந்து சிறுமியை வேலைக்கு அமர்த்தி துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி படுகொலைசெய்வதற்கு காராணமாக இருந்ததற்காக உச்சபட்ச தண்டனை வழங்கப்படவேண்டும் என்று இதன்போது வலியுறுத்தப்பட்டது.
குறித்த சிறுமியின் படுகொலை தொடர்பில் தற்போது முன்னெடுக்கப்படும் விசாரணைகளை வரவேற்ற போராட்டக்காரர்கள் குறித்த விசாரணைகளை துரிதப்படுத்தி பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு நீதியை வழங்கவேண்டும் எனவும் வேண்டுகோள்விடுத்தனர்.
அத்துடன் சிறுவர்,சிறுமிகளை வேலைக்கமர்த்துவது குறித்தான சட்ட திருத்ததினை மேற்கொண்டு எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதை அரசாங்கம் உறுதிப்படுத்தவேண்டும் எனவும் இங்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டதுடன் ஜனாதிபதிக்கான மகஜர் ஒன்றும் இதன்போது கையளிக்கப்பட்டது.
இந்த போராட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன்,மாவட்ட அபிவிருத்திக்குழுவின் செயலாளர் சட்டத்தரணி திருமதி மங்களா சங்கர் உட்பட பெருமளவான மகளிர் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.