கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்தை இலங்கையில் உற்பத்தி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி


கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்தை இலங்கையில் உற்பத்தி செய்வதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

விசேட அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான அமைச்சரவை பத்திரத்தை சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி முன்வைத்த நிலையில்இ இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அரச மருந்தாக்க கூட்டுத்தாபனமும் சிநோவெக் பயோடெக் மற்றும் கெலுன் லைஃப் சயன்ஸ் தனியார் கம்பெனியும் இணைந்து கொரோனா தடுப்பு மருந்தை இலங்கையில் உற்பத்தி செய்வது தொடர்பில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.