எங்கள் பார்வையில் எம்மவர் படைப்பு – தளராதவன் ..!!

நம்மவர் படைப்புகளில் அதிக பார்வையை செலுத்திவரும் VISUAL ART MOVIES நிறுவனத்தின் அடுத்த படைப்பாக திரைக்கு வருகிறது தளராதவன் குறுந்திரைப்படம்.

தளராதவன் : 

இப் பெயரே தன்னம்பிக்கையை வெளிப்படுத்தக்கூடிய வகையில் அமைந்துள்ளது. பெயரைப் போன்றே திரைப்படமும் வித்தியாசமான ஒரு கதையம்சத்துடன் திரைக்கு வரப் போகிறது என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.


இது குறித்து தளராதவன் திரைப்படத்தின் இயக்குனர் திரு . கோடீஸ்வரன் அவர்கள் கருத்து தெரிவிக்கையில்,


நம்மவர் படைப்புகளை நாம் முன் கொண்டுவருவது எங்கள் தலையாய கடமையாகும். எம்மாலும் இந்திய சினிமாவிற்கு நிகராக படைப்புகளை தரமுடியுமென இக்கால இளைஞர்கள் நிரூபித்தவண்ணம் இருக்கின்றார்கள். இதனை சான்று படுத்தும் வகையில் VISUAL ART MOVIES முரளிதரன் அவர்களின்  தயாரிப்பில் , கோடீஸ்வரன் அவர்களின் இயக்கத்தில், மட்டக்களப்பின் புதுமுக கலைஞர்களைக் கொண்டு தயாரித்து வருகின்ற புது வருடத்தின் புது வரவாக மட்டக்களப்பு மாங்காடு கிவேஸ் திரையரங்கில் எதிர்வரும் 10 ம் திகதி மாலை 5 மணியளவில் திரையிட படவிருக்கும் தளராதவன் திரைப்படத்திற்கு இலங்கையின் பல சினிமா பிரபலங்களும் சமூக ஆர்வலர்களும் வாழ்த்துகள் தெரிவித்தவண்ணம் இருக்கின்றனர்.


புதிய புதிய கலைஞர்களை அறிமுகம் செய்யும் மட்டு நகரின் சிறந்த ஒரு இயக்குனரென தனக்கென தனியிடம் பிடித்திருக்கும் திரு.கோடீஸ்வரன் அவர்களுடன் இணைந்து அதே வழியை பின்பற்றி ஆர்வமுள்ள கலைஞர்களுக்கான அங்கீகாரத்தை நாங்களும் வழங்க தயாராக இருக்கின்றோம் எனவும் VISUAL ART MOVIES நிறுவனத்தின் நோக்கமே ”மட்டக்களப்பில் தயாரிக்கப்படுகின்ற எல்லா குறுந்திரைப்படங்களும் திரையில் திரையிடப்பட்டு வணிக சினிமாவாக அவை வளர வேண்டும் என்பதே” எனவும் VISUAL ART MOVIES நிறுவனத்தின் ஸ்தாபகர் திரு. முரளிதரன் அவர்களும் தெரிவித்திருந்தார்.


இரண்டு  மாதங்களுக்கு முன்பு தயாரிப்பாளர் திரு. முரளிதரன் அவர்களும் , இயக்குனர் திரு . கோடீஸ்வரன் அவர்களும் இணைந்து மாயை மாற என்ற குறுந்திரைப்படத்தை திரையரங்கில் திரையிட்டு ரசிகர்களின் அமோக வரவேற்பினையும் பாராட்டினையும் பெற்றமை நாம் யாவரும் அறிந்ததே. இவர்களின் மற்றுமொரு படைப்பாக வெளிவரவிருக்கும் தளராதவன் திரைப்படமும் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடிக்கும் என்பது எமது எதிர்பார்ப்பாகும்.


எனவே நம்மவர் படைப்புகளுக்கு என்றும் நம்மவர் ஊடகம் என்ற சார்பில் மட்டு  செய்திகளும் பக்க துணையாக என்றும் இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை .


எனவே வருகின்ற 10 ம் திகதி மாலை 5 மணியளவில் மட்டக்களப்பு மாங்காடு கிவேஸ் திரையரங்கில் திரையிட பட இருக்கும் தளராதவன் திரைப்படத்திற்கு மக்களாகிய நீங்களும் வருகை தந்து திரைப்படத்தை பார்வையிடுவதோடு மட்டுமல்லாமல் தங்கள் வாழ்த்துகளையும் வழங்கி நமது இளைஞர்களின் படைப்புகளுக்கு உங்களுடைய ஆதரவினை வழங்குமாறுமட்டு செய்திகள்  சார்பாக கேட்டுக்கொள்கின்றோம் .


எனவே அன்பான ரசிகர்கள் அனைவரையும் அன்போடு அழைப்பது மட்டுமில்லாமல் தங்கள் நண்பர்களுக்கும் இதை பகிந்து  நமது கலையையும் நம்மவர் படைப்புகளுக்கும் அங்கீகாரம் அளிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் 


நன்றி