புகைப்படத்துடன் சென்ற பொலிஸார் அரியநேத்திரனிடம் விசாரணை!

 


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனுக்கு மட்டக்களப்பு பொலிஸாரால் பொத்திவில் தொடக்கம் பொலிகண்டி வரையான கலந்துகொண்டது தொடர்பாக வாக்கு மூலம் (வெள்ளிக்கிழமை) (19)இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசு கட்சியின் ஊடகச்செயலாளரும் பட்டிப்பு தொகுதி இலங்கை தமிழரசு கட்சியின் தலைவருமான பா.அரியநேத்திரன் இல்லத்தில் மட்டக்களப்பு பொலிஸாரால் வாக்கு மூலம் பெறப்பட்டது. 

 வாக்கு மூலத்தில் பொத்திவில் தொடக்கம் பொலிகண்டி வரையான கண்டன பேரணியில் மட்டக்களப்பு நீதிமன்ற தடையுத்தரவை மீறி செயற்பட்டார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே பொலிஸாரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாகவும். 


 சம்பந்தப்பட்ட வாக்கு மூலத்தின் போது தமக்கு மட்டக்களப்பு பொலிஸாரால் நீதிமன்ற தடையுத்தரவு வழங்கப்படவில்லை எனவும் இது ஜனநாயக ரீதியான மக்கள் போராட்டம் என்பதால் மக்களுடன் கலந்துகொள்வதற்கு உரிமை இருப்பதால் தாம் மக்களுடன் கலந்து கொண்டதாக பா.அரியநேத்திரன் தெரிவித்தாகவும் பொத்திவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டத்தில் கலந்து கொண்ட புகைப்பட ஆதாரத்துடன் அதனை காட்டி விசாரணைகளை மேற்கொண்டதாகவும் எமக்கு கூறினார்.