வெல்லாவெளி - முத்துமாரியம்மன் ஆலயத்தின் முன் சடலமொன்று மீட்பு.

 


(ரஞ்சன்)

மட்டக்களப்பு -வெல்லாவெளி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின்  முன்  உள்ள கலையரங்கில் கைவிடப்பட்ட நிலையில் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டது.

 போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வெல்லாவெளி கிராமஉத்தியோகஸ்தர் பிரிவில் உள்ள  வெல்லாவெளி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் முன் உள்ள கலையரங்கில்  குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. 

 இன்று 20-02-2021 ம் திகதி  சுமார் 76    வயதுடைய ஆண் ஒருவரின்  சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

வெல்லாவெளி  ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய பரிபாலன சபையினர்  வெல்லாவெளி கிராமஉத்தியோகஸ்தருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

 கிராமஉத்தியோகஸ்தர் வெல்லாவெளி பொலிஸ் நிலையத்துக்கு தெரியப்படுத்தியதையடுத்து பொலிஸ்சார் சம்பவ இடத்துக்கு வருகைதந்து    விசாரணைகளை மேற்கொண்டதனை தொடர்ந்து. 

சம்பவ இடத்திற்கு வருகைதந்த களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்ற நீதிபதி   சடலத்தினை பார்வையிட்டதுடன் விசாரணைகளை முன்னெடுக்குமாறு பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

 போரதீவுப்பற்று பிரதேச சபை இலவச அமரர் ஊர்தியில்  கைவிடப்பட்ட நிலையில் மேற்படி  சடலத்தை போரதீவுப்பற்று பிரதேச சபைத் தவிசாளர் யோ. ரஜனி அவர்களின்   வேண்டுகோளுக்கு அமைவாக சடலம்  மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு     கொண்டு செல்லப்பட்டது.