நாவற்காடு நாமகள் வித்தியாலயத்தில் உதயகுமார் கல்வி மையத்தின் ஊடாக கல்வி கருத்தரங்கு!

 

(லக்‌ஷன்) 

உதயகுமார் கல்வி மையத்தின் ஊடாக "வளர்ச்சியின் உச்ச நிலை கல்வி " எனும் தொனிப் பொருளில் கல்வி கருத்தரங்கு நாவற்காடு நாமகள் வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது.

இன்றைய தினம் 20/02/2021மண்முனை மேற்கு வலயத்திற்கு உட்பபட்ட மட்/ம.மே வவுணதீவு பரமேஸ்வரா வித்தியாலயம், மட்/ம.மே நாவற்காடு நாமகழ் வித்தியாலயம், மட்/மமே மகிளவட்டவான் மகா வித்தியாலயம் ஆகிய மூன்று பாடசாலைகளில் இவ்வருடம் க.பொ.சாதாரணதர பரீட்சையில் தோற்ற இருக்கும் மாணவர்களுக்கான கல்வி கருத்தரங்கானது அக்னிச் சிறகுகள் ஏற்பாட்டில் உதயகுமார் கல்வி மையத்தின் முழு நிதி அனுசரணையுடன் நடைபெற்றது.

இன்  நிகழ்வில்  ம/மமே/வலயக் கல்விப் பணிப்பாளர் செல்வி அகிலா கனகசூரியம் சிறப்பு அதிதியாக கலந்துகொண்டு கல்வி கருத்தரங்கை ஆரம்பித்து வைத்தார், ம/மமே/நாவற்காடு நாமகள் வித்தியாலய பிரதி அதிபர் க.திருச்செல்வம்,வளவாளர் MR.K.Mahenthiran(B.A.(Hons)History,ISA of History,நாவற்காடு நாமகள் வித்தியாலயத்தின் பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் திரு.இ.ராமச்சந்திரன்,அக்னிச் சிறகுகள் பேரவை தலைமை ஒருங்கிணைப்பாளரும்,உதயகுமார் கல்வி நிலையத்தின் செயலாளருமான திரு.ம.ஜெயக்கொடி, உதயகுமார் கல்வி நிலையத்தின்பொருளாளர்.திருமதி அனோஜன் விதுசா,இணைப்பாளர் திரு.க.கோபாலசிங்கம்,அக்னிச் சிறகுகள் பேரவை உறுப்பினர்கள் ,பழைய மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.