தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் முன்னாள் தலைவரின் 12வது ஆண்டு நினைவு தினம்


தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் முன்னாள் தலைவர் குமாரசுவாமி நந்தகோபனின் 12வது ஆண்டு நினைவு தினம் நேற்று அனுஸ்டிக்கப்பட்டது.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைமைக்காரியாலயத்தில் இது தொடர்பான நிகழ்வு நேற்று நடைபெற்றது.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பிரதிதலைவர் த.யோகவேள் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நந்தகோபனின் சகோதரர் நளினகாந்தன் உட்பட கட்சி உறுப்பினர்கள்,பிரதேசசபை,மாநகரசபை உறுப்பினர்கள்,வாழைச்சேனை பிரதேசசபை தவிசாளர் திருமதி சோபா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் முன்னாள் தலைவர் குமாரசுவாமி நந்தகோபனின் சிலைக்கு முன்பாக சுடர் ஏற்றப்பட்டு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மௌன வணக்கம் செலுத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் முன்னாள் தலைவர் குமாரசுவாமி நந்தகோபனின் நினைவு தின உரைகள் நடைபெற்றன.

2008ஆம் ஆண்டு இன்றைய நாளில் கொழும்பில் இருந்து மட்டக்களப்பு வரும்போது இனந்தெரியாத நபர்களினால் இவர் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.