மட்டு மண்ணில் இளம் நாடக கலைஞர் களை உருவாக்கும் முயற்ச்சி

தரம் 6-13 வரையான நாடகமும் அரங்கியலும் மாணவர்களுக்கான செயன்முறை வகுப்புகள் எமது கலை பீடத்தால் நடாத்து வதற்காக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு வட இலங்கை சங்கீத சபையின் தரமுயர்த்தல் பரீட்சசைக்கான பாடத்திட்டமும் கற்பிக்கப்பட்டு மாணவர்களை அப்பரீட்சைக்கு தயார் செய்யவும் நடவடிக்கை எடுக்க படுகிறது. இதன் முதற்கட்ட நிலையாக எதிர் வரும் 12, 19. 09.2020 ம் திகதி அன்று நடைபெற இருக்கின்ற பரீட்சையில் எமது மாணவர்கள் தரம் 3, 4ற்காக தோற்றுகின்றனர்.
அத்தோடு மாணவர்களின் வகுப்பு நேரங்கள்
தரம் 6, 7, 8 ற்கும்
9, 10, 11ற்கும்
12, 13 ற்கும் வெவ் வேறாக பிரிக்கப்பட்டு நடைபெறும் .
அத்தோடு இம்மாணவர்கள் பாடசாலை நாடக போட்டிகளை மாத்திரம் அல்லாது அரச நாடக விழா போன்ற பிற போட்டிகளிலும் நடிப்பதற்காக பயிற்றுவிக்கப்பட்டு திறமைகளின் அடிப்படையில் நடிக்க வைக்கப்படுவர்.
எமது பாடசாலை சூழலில் உள்ள மாணவர்களை பயிற்றுவித்து நாடக துறை சார் திறமையாளர்களாக மாற்றுவதே எமது நீண்ட காலச் செயற்பாடு
ஆகவே அனைத்து நாடகத்துறை சார் ஆசிரியர்களுக்கும் கலைஞர்களுக்கும் இத்தகவலை பகிர்ந்து எமக்கு உதவி செய்யுங்கள்.
இடம் - பயிற்சி கூடம்
எங்கள் ஆசான் அரங்கியல் கலை பீடம் இருதய புறம்
சனி ஞாயிறு தினங்களில் நடைபெறும் . நேரம் மாணவர்களின் பிற வகுப்பு நேரங்களில் பாதிப்புகளை ஏற்படுத்தா வண்ணம் ஒழுங்கு செய்யப்படும்.
தயவு செய்து உங்கள் உதவிகளை வழங்கி எம்மையும் எம் மாணவர் சமூகத்தையும் ஆதரிக்கவும் நன்றி.
என்றும் எமது ஆசான் பேராசிரியர் சி. மௌனகுரு அவர்களின் ஆசி வழிகாட்டலுடனும்
முன்னாள் மட்டு கல்வி வலய அழகியல் உதவி கல்வி பணிப்பாளர்
திரு. ஜெயசிறிபவன் ஐயா அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலுடனும் எம் பணி இனிதே தொடரும்.
🧨🧨கலையால் மகிழ்வித்து🧨🧨 கலைஞனாய் மகிழ்.
🐎🐎🐎R.N.R.அரவிந்த் 🐎🐎🐎
மேலதிக தொடர்புகளுக்கு 0770698921