பனிச்சையடியில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரம்!

மட்டக்களப்பு திராய்மடு பனிச்சையடி பகுதியில் இன்றைய தினம் (05) தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் இரண்டாம் கட்ட தேர்தல் பிரச்சாரம் முன்னெடுப்பு.

 நேற்றைய தினம் முதலாம் கட்ட தேர்தல் பிரச்சாரம் இராமகிருஷ்ண மிஷன் சுவாமியின் ஆசிர்வாத்த்துடன்  ஆரம்பிக்கபட்டது.

 ஆவணி ஐந்தாம் திகதி இடம்பெறவிருக்கும் பொதுத்தேர்தலில் வீட்டு சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்கிற அம்சத்துடன் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன்,கிழக்கு மாகாணசபை உறுப்பினர் நடராசா,தமிழரசு கட்சி வடகிழக்கு வாலிபர் முன்னணி தலைவர் சேயோன் மட்டு நகர் சரவணபவான்,தமிழரசு கட்சியின் மகளிர் அணி உறுப்பினர் தேவமணி,ரஜனி மண்முனை தென்மேற்கு பிரதேச சபை தவிசாளர் சண்முகராசா,உபதவிசாளர் கேசவன் ஆகியோர் இந்த தேர்தல் பிரசார பணியை மேற்கொண்டனர்.