மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதியில் மழைகாலங்களில் ஏற்படுகின்ற வெள்ள நீர் வடிந்தோடுவதற்கு எதுவாகவுள்ள இயற்கை நீரோட்ட வடிகான்களை துப்பரவு செய்து அவற்றை சீரமைக்கும் பணிகள் இன்று காலை ஆரம்பித்துவைக்கப்பட்டன.
இராணுவத்தின் உதவியுடன் மட்டக்களப்பு மாநகரசபையினால் இந்த பணிகள் இன்று காலை முன்னெடுக்கப்பட்டது.மட்டக்களப்பு நகர எல்லைக்குட்பட்ட பல கிராமங்களில் இயற்கை நீரோட்டப்பாதைகள் சில பொதுநபர்களால் அடாத்தாக பிடிக்கப்பட்டு நிரப்பப்பட்டிருந்தமையாலும், வடிகான்கள் தூர்ந்து போயிருந்தமையாலும் மட்டக்களப்பு நகரானது ஒவ்வொரு வருடமும் வெள்ள அனர்த்தத்திற்கு உள்ளாகி வருகின்றது.
இவ் அனர்த்ததினைக் குறைக்கும் வகையில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் வடிகான்களை புனரமைக்க நிதி ஒதுக்கீடு செய்து தருமாறு கிழக்கு மாகாண ஆளுநரிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய தற்கால நிதிநிலமைகளைக் கருத்தில் கொண்டு முதற்கட்டமாக இராணுவத்தின் உதவியுடன் பிரதான வடிகான்களை உடனடியாக துப்பரவு செய்து தருவதாக ஆளுநர் ஒப்புதல் வழங்கியிருந்தார்.அதற்கமைய இன்று காலை இராணுவத்தின் உதவியுடன் மட்டக்களப்புமாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் வடிகான்களை புனரமைக்கும் பணிகள் ஆரம்பித்துவைக்கப்பட்டன.
இதன் ஆரம்ப நிகழ்வில் ஆளுநரின் செயலாளர் எல்.பி.மதநாயக்க, இராணுவ உத்தியோகத்தர் கேர்ணல் சரத் குணசேகர, ஆகியோர் பங்குகொண்டனர்.
இதன்போது மாநகரசபை ஆணையாளர் க.சித்திரவேல், பிரதி ஆணையாளர் உ.சிவராஜா, சுகாதார நிலையியற் குழுவின் தலைவர் சிவம் பாக்கியநாதன், மாநகர சபை உறுப்பினர்களான க.ரகுநாதன்,ஐ.சிறிதரன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
இன்றைய தினம் முதல் கட்டமாக ஐந்து கிலோமீற்றர் நீளம் வடிகான்கள் துப்புரவு செய்யப்படவுள்ளதாக மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்தார்.
முட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் 39 கிலோமீற்றர் நீளமாக வடிகான்கள் துப்புரவு செய்யவேண்டிய நிலையில் உள்ளதாகவும் பொதுமக்களும் இதற்கான பங்களிப்பினை வழங்கவேண்டும் எனவும் முதல்வர் வேண்டுகோள் விடுத்தார்.
இராணுவத்தின் உதவியுடன் மட்டக்களப்பு மாநகரசபையினால் இந்த பணிகள் இன்று காலை முன்னெடுக்கப்பட்டது.மட்டக்களப்பு நகர எல்லைக்குட்பட்ட பல கிராமங்களில் இயற்கை நீரோட்டப்பாதைகள் சில பொதுநபர்களால் அடாத்தாக பிடிக்கப்பட்டு நிரப்பப்பட்டிருந்தமையாலும், வடிகான்கள் தூர்ந்து போயிருந்தமையாலும் மட்டக்களப்பு நகரானது ஒவ்வொரு வருடமும் வெள்ள அனர்த்தத்திற்கு உள்ளாகி வருகின்றது.
இவ் அனர்த்ததினைக் குறைக்கும் வகையில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் வடிகான்களை புனரமைக்க நிதி ஒதுக்கீடு செய்து தருமாறு கிழக்கு மாகாண ஆளுநரிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய தற்கால நிதிநிலமைகளைக் கருத்தில் கொண்டு முதற்கட்டமாக இராணுவத்தின் உதவியுடன் பிரதான வடிகான்களை உடனடியாக துப்பரவு செய்து தருவதாக ஆளுநர் ஒப்புதல் வழங்கியிருந்தார்.அதற்கமைய இன்று காலை இராணுவத்தின் உதவியுடன் மட்டக்களப்புமாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் வடிகான்களை புனரமைக்கும் பணிகள் ஆரம்பித்துவைக்கப்பட்டன.
இதன் ஆரம்ப நிகழ்வில் ஆளுநரின் செயலாளர் எல்.பி.மதநாயக்க, இராணுவ உத்தியோகத்தர் கேர்ணல் சரத் குணசேகர, ஆகியோர் பங்குகொண்டனர்.
இதன்போது மாநகரசபை ஆணையாளர் க.சித்திரவேல், பிரதி ஆணையாளர் உ.சிவராஜா, சுகாதார நிலையியற் குழுவின் தலைவர் சிவம் பாக்கியநாதன், மாநகர சபை உறுப்பினர்களான க.ரகுநாதன்,ஐ.சிறிதரன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
இன்றைய தினம் முதல் கட்டமாக ஐந்து கிலோமீற்றர் நீளம் வடிகான்கள் துப்புரவு செய்யப்படவுள்ளதாக மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்தார்.
முட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் 39 கிலோமீற்றர் நீளமாக வடிகான்கள் துப்புரவு செய்யவேண்டிய நிலையில் உள்ளதாகவும் பொதுமக்களும் இதற்கான பங்களிப்பினை வழங்கவேண்டும் எனவும் முதல்வர் வேண்டுகோள் விடுத்தார்.