மட்டக்களப்பு மாநகரசபையில் தானியங்கி தொற்றுநீக்கி இயந்திரம் சேவையில்

கொரனா அச்சுறுத்தல்கள் மத்தியில் நாடெங்கிலும் மாநகரசபைகள் தமது பணிகளை ஆரம்பித்துள்ள நிலையில் அங்கு வரும் மக்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாநகரசபைக்கு வரும் மக்களின் நன்மை கருதி தானியங்கி தொற்று நீக்கி அமைக்கப்பட்டு இன்று மக்களின் பாவனைக்காக வழங்கப்பட்டது.

கிழக்கு மாகாண கிராமிய அபிவிருத்தி திணைக்களத்தின் தொழில்நுட்ப பிரிவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த தானியங்கி தொற்று நீக்கும் கருவியே மட்டக்களப்பு மாநகரசபையில் அமைக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் நடைபெற்றது.இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண கிராமிய அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் என்.தனஞ்செயன், மாநகரசபையின் சுகாதார பிரிவிற்கான தலைவர் சிவம் பாக்கியநாதன் மற்றும் மாநகரசபை உறுப்பினர்கள்,உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது மாநகரசபை முதல்வர் தானியங்கி தொற்று நீக்கி இயந்திரத்தில் தொற்றி நீக்கி பணிகளை ஆரம்பித்துவைத்ததை தொடர்ந்து ஏனையவர்களும் தொற்று நீக்கப்பட்டு மாநகரசபைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

அத்துடன் இதன்போது உடல்வெப்பத்தினை பரிசோதனைகள் செய்யும் நடவடிக்கைகளும் இதன்போது முன்னெடுக்கப்பட்டன.