(எஸ்.நவா)
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக 25 கிராம பிரிவுகளில் உள்ள 200 விசேட தேவையுடையவர்களுக்கு ருபா 2056 பெறுமதியான நிவாரணப் பொதிகள் பெரிய கல்லாறு கடலாச்சியம்மன் ஆலய பக்தடியார்களின் அணுசரணையுடன் வழங்கி வைக்கப்படடுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரிவிலுள்ள 570 விசேட தேவையுடையவர்கள் இருந்தும் இவற்றின் முதல் கட்டமாக 200விசேட தேவையுடையவர்களுக்கு பெரியகல்லாறு கடலாச்சியம்மன் ஆலய பக்தர்களின் நிதியுதவியுடன் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் ஆர்.ராகுலநாயகி அவர்களின் ஆலோசனைக்கமைவாக வெல்லாவெளி சக்தி கலாமன்ற உறுப்பினர்கள் இணைந்து ருபா 411200 பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் 3ம் கட்டமாக வழங்கி வைக்கப்பட்டது.
முதலாம் கட்ட நிவாரணப் பணியானது போரதீவுப்பற்று பிரிவில் உள்ள 250 குடும்பங்களுக்கு ருபா 504500 பெறுமதியான பொதிகளும் இரண்டாம் கட்டமாக 558 குடும்பங்களுக்கு ருபா 1229722 பெறுமதியான பொதிகள் மொத்தமாக 1008 குடும்பங்களுக்கு ரூபா 2145422 பெறுமதியான பொதிகள் வழங்கி வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதன் போது பிரதேச செயலாளர் ஆர்.ராகுலநாயகி; சமூக சேவக உத்தியோகத்தர் பெரிய கல்லாறு கடலாச்சியம்மன் ஆலய பக்தர்கள் பொது சுகாதார உத்தியோகத்தர் கிராம சேவக உத்தியோகத்தர் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் அபிவிருத்தி உத்தியோகத்தர் வெல்லாவெளி சக்தி கலாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து செயற்பட்டனர்
மேலும் இப்பணியானது தொடர்ந்து மேற்கொள்வதோடும் கல்வி சார்பாக மாணவர்களை வளப்படுத்துவதற்கு 5ம் ஆண்டு புலமைப்பரீட்சையில் தோற்ற இருக்கும் 650 மாணவர்களுக்கு பரீட்சை வினாத்தாள்கள் மற்றும் க.பொ.த உயர்தரம் ஃ சாதாரண தர வறிய மாணவர்களுக்கான உதவிகளும் வழங்குவதற்கு இவ்வமைப்பு முன்வந்துள்ளது விசேட அம்சமாகும்.