மட்டக்களப்பு நகரில் பொலிஸார் விசேட சோதனை நடவடிக்கை

மட்டக்களப்பு நகரில் பொலிஸாரினால் விசேட வீதிச்சோதனை நடவடிக்கைகள் இன்று காலை முன்னெடுக்கப்பட்டன.

மட்டக்களப்பு தலைமையக போக்குவரத்து பொலிஸாரினால் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
கோரணா அச்சுறுத்தல் காரணமாக பொலிஸ் மற்றும் சுகாதார திணைக்களங்கள் ஊடாக பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதுடன் அது தொடர்பில் மக்களை அறிவுறுத்தவும் பொலிஸாரின் அறிவுறுத்தல்களை மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கையெடுக்கும் வகையிலும் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது ஊரடங்கு தளர்த்தப்பட்ட காலத்தில் வெளியில் செல்வோர் முன்னெடுக்கவேண்டிய அடையாள அட்டை எண் நடைமுறைகள் குறித்து இதன்போது பொலிஸாரினால் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.
முட்டக்களப்பு தலைமைய போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி ஆர்.எம்.எப்.ஐ.ராஜபக்ஸ தலைமையில் இந்த சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது மட்டக்களப்பு நகருக்குள் நுழைவோரும் மட்டக்களப்பு நகரில் இருந்து வெளியில் செல்வோரும் சோதனைக்குட்படுத்தப்பட்டதுடன் போக்குவரத்து பஸ்களில் சமூக இடைவெளியை பேணுதல் குறித்தும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
ஆத்துடன் பொலிஸ் பாஸ் நடைமுறைகள் மற்றும் பயணம் செய்யும் பொதுமக்கள் முககவசம் அணிவதன் அவசியம் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதுடன் முக கவசம் அணியாத பொதுமக்கள் எச்சரிக்கப்பட்டு திருப்பியனுப்பப்பட்டனர்.