போரதீவுப்பற்று பிரதேசசபையினால் தொற்று நீக்கி மருந்து தெளிக்கும் நடவடிக்கை

(ரஞ்சன்)

மட்டக்களப்பு மாவட்டம் உட்பட 19 மாவட்டங்களில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு நாளை காலை 6.00மணி தொடக்கம் மாலை 4.00மணி வரையில் தளர்த்தப்படவுள்ளது.

இந்த நிலையில் பொதுமக்கள் அதிகளவில் பயணிக்கும் இடங்களில் தொற்று நீக்கி மருந்துகள் தெளிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

போரதீவுப்பற்று பிரதேசசபைக்குட்பட்ட மக்கள் ஒன்றுகூடும் அனைத்து பகுதிகளிலும் இன்று தொற்று நீக்கி மருந்து தெளிக்கும் நடவடிக்கைககள் முன்னெடுக்கப்பட்டன.

போரதீவுப்பற்று பிரதேசசபையின் தவிசாளர் யோ.ரஜனியின் வழிகாட்டலின் கீழ் போரதீவுப்பற்று பிரதேசசபையின் உறுப்பினர்களினால் இந்த தொற்று நீக்கி மருந்து தெளிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது அரச
அலுவலகங்கள், பொதுச்சந்தைகள்,திணைக்களங்கள்,தனியார் வர்த்தக மற்றும் வங்கிகள் ஆகியவற்றில் இந்த தொற்று நீக்கி மருந்துகள் தெளிக்கப்பட்டன.