புதிதாக நியமனம் பெற்ற பட்டதாரி பயிலுனர்களுக்கு மண்முனை பிரதேச செயலகம் விடுக்கும் முக்கிய அறிவிப்பு

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் நாளை கடமையேற்கவுள்ள பயிலுனர் பட்டதாரிகளுக்கு அவர்கள் கடமையேற்கவுள்ள பிரிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

தற்போது கொரனா அச்சுறுத்தல் காரணமாக ஒன்றுகூடுவதை தவிர்க்குமாறு அரசாங்கம் விடுத்துள்ள வேண்டுகோளுக்கு அமைவாக பிரதேச செயலகத்திற்கு நியமனம் கிடைக்கப்பெற்றுள்ள பயிலுனர் வருகைதரதேவையில்லையெனவும் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் அறிவித்துள்ளார்.

அதனடிப்படையில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்கு பயிலுனர்களாக இணைக்கப்பட்டுள்ளவர்களுக்கான இடஒதுக்கீடுகள் கீழ் உள்ள அட்டவணையில் வெளியிடப்பட்டுள்ளது.அதனடிப்படையில் ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு செல்லவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் சென்று தமது கடமைகளை பொறுப்பேற்குமாறும் ஒன்றுகூடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறும் பிரதேச செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.