வீதிகளில் கைவிடப்பட்டவர்களுக்கு ஊரடங்கினையும் தாண்டி இனமத பேதங்கள் பாராமும் இளைஞர்கள்

முழு இலங்கையும் ஊரடங்கினால் அடங்கிப்போயுள்ள நிலையில் வீதிகளில் கைவிடப்பட்டு அலையும் அவலங்களுக்கு பல்வேறு தரப்பினரும் உதவி வருவதை காணமுடிகின்றது.

ஊரடங்கினால் மட்டக்களப்பு மாவட்டமே முடங்கியுள்ள நிலையில் வீதிகளில் செல்ல இடமின்றி கைவிடப்பட்ட நிலையில் உள்ளவர்களின் பாடு பெரும் கஸ்டமான நிலையில் உள்ளது.

இவ்வாறானவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு உதவும் பணிகளை மட்டக்களப்பு இளைஞர்கள் சிலர் முன்னெடுத்துவருகின்றனர்.

இனமத பேதங்கள் பாராமல் மட்டக்களப்பு,காத்தான்குடி,ஆரையம்பதி ஆகிய பகுதிகளில் வீதிகளில் கைவிடப்பட்ட நிலையில் உள்ளவர்களுக்கு மதிய உணவுகளை வழங்கியுள்ளதுடன் இன்று மாலை இரவு உணவினையும் வழங்கியுள்ளர்.

இவ்வாறான இளைஞர்களின் உதவி நடவடிக்கைகளுக்கு உதவும் உள்ளங்கொண்டவர்கள் உதவ முன்வரவேண்டும் என்ற கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.