மட்டக்களப்பு மாவட்டத்தில் மீண்டும் எதிர்வரும் 06ஆம் திகதி வரையில் நீடிக்கும் ஊரடங்கு

மட்டக்களப்பு மாவட்;டம் உட்பட 16 மாவட்டங்களுக்கான ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 06ஆம் திகதி வரை நீடிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 06மணிக்கு தளர்த்தப்பட்ட ஊரடங்கு சட்டம் இன்று பிற்பகல் 2.00மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளது.

இந்த நிலையில் எதிர்வரும் திங்கட்கிழமை 06ஆம் திகதி காலை 06மணி வரையில் நீடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.